articles

‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்  பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்  நாடு, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளன. 

இதில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த  வழக்கை வெள்ளியன்று காலை விசா ரித்த உச்சநீதிமன்றம், “தமிழ்நாடு அரசு  இங்கே குறிப்பிடும் விஷயங்கள், தீவிர மான மற்றும் கவலைக்குரிய பிரச்சனை களாகவே இருக்கின்றன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி-யில் தலைவர் பதவி 10 பதவியிடங்கள் காலியாக உள்ளது மிக வும் கவலை அளிக்கும் விஷயம். ஆளு நர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க லாம். ஒருவேளை அது நிதி மசோதா வாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில்  திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவ ரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க லாம். ஆனால், சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடி யாது” என்று கூறியிருந்தது.

இதையடுத்து வெள்ளி பிற்பகலில்,  பஞ்சாப் அரசின் வழக்கு விசாரிக்கப்பட்டது.

அப்போது பஞ்சாப் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். தமிழக அரசுத் தரப்  பிலும் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், ‘‘பஞ்சாப் மாநில ஆளுநர் மொத்தமாக ஏழு மசோ தாக்களை நிலுவையில் வைத்துள் ளார். இவை அனைத்தும் வெவ்வேறு துறை சார்ந்தது’’ என தெரிவித்தார்.

அப்போது பஞ்சாப் ஆளுநர்  தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர், ‘‘பஞ்சாப் மாநிலத்தை பொறுத்த மட்டில் சட்டப்பேரவையில் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் நான்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் இருக்கிறார்’’ என தெரி வித்தார்.

த்தார். அவரிடம் குறுக்கிட்டுப் தலைமை  நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘‘ஜனநாய கம் செயல்பட வேண்டும் என்றால் ஆளு நரும் மாநில முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு சட்டப்  பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந் ததை சுட்டிக்காட்டினால் அதனை கண்  டிப்பாக ஏற்க முடியாது’’ என்றார்

இதற்கு, ‘‘ஆளுநரை எதிர்க்கும் விதமாக மாநில முதல்வர் சட்டபேரவை உரையின் போது பேசியுள்ளார்’’ என  ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் ஆகாத கார ணம் ஒன்றைக் கூறினார். இதனால், மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட், ‘‘இந்த விவகாரத்தில்  ஆளுநரை மாநில முதல்வர் மரியாதை யாக பேசினாரா?, இல்லையா? என்பது இங்கு கேள்வியே கிடையாது. அது  தனிப்பட்ட விஷயம். இங்கே, சட்டமன்ற  கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டுவ தும் மற்றும் அரசின் மசோதாக்கள் மீது  ஆளுநர் ஒப்புதல் அளித்து செயல் படுத்துவதும் ஆகிய இரண்டும் முக்கி யத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால்  இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசாங்  கத்தின் செயல்பாடுகளும், ஆளுநரின்  செயல்பாடுகளும் மிகவும் கவலை அளிக்கிறது. குறிப்பாக இரு தரப்பும்  அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள்’’ என கோபமாக தெரிவித்தார்.

அப்போது, ‘‘கூட்டத் தொடரை நடத்துவது என்பது மாநில அரசுடைய அதிகாரம். அதை சபாநாயகர் கொண்டு நாங்கள் முறையாக மேற் கொண்டு வருகிறோம். ஆனால் இங்கு  பிரச்சனையே ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பது தான்’’ என்று  சிங்வி தெரிவித்தார்.

இதையடுத்து பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது கடும் அதிருப்தியைத் தெரி வித்தார். 

‘‘நீங்கள் (பஞ்சாப் ஆளுநர்) நெருப்புடன் விளையாடுகிறீர்கள். அது வேண்டாம் என்று நாங்கள் நினைக்கி றோம். இந்த விவகாரம் மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்ததாக உச்ச நீதிமன்றம் பார்க்கிறது. மாநில அரசால் சட்டப்பேர வையில் அனுப்பப்பட்ட மசோதாக் களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட  முடியும்? அதேபோன்று தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும்? ஆளுநருக்கு  இதுபோன்ற அதிகாரங்களை யார்  கொடுத்தது? இது வேதனையான ஒன் றாகும். உங்களது செயல்பாடுகளின் தீவிரத்தை ஆளுநராக புரிந்து கொள்ள முடிகிறதா, இல்லையா என்பது எங்க ளுக்கு புரியவில்லை. இருப்பினும், ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகள் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை கொஞ்  சம் சுய பரிசோதனை செய்து கொள்ள  வேண்டும்’’ என காட்டமாக தெரிவித் தார்.

அப்போது இந்த விவகாரத்தில் விரிவான விளக்கம் அளிக்க ஒரு வாரம்  அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை யடுத்து வழக்கு விசாரணையை தீபா வளி விடுமுறைக்கு பின்னர் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.